ADDED : ஜூலை 06, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; அ.தி.மு.க.,வின் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணம் மேட்டுப்பாளையத்தில் துவங்குகிறது.
இதையொட்டி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று காலை, 8:00 மணிக்கு வனபத்ரகாளி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார். மாலை, 3:00 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே எழுச்சி பயணத்தை துவக்கி வைக்கிறார்.
4:00 மணிக்கு காரமடை, 5:00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பின்பு துடியலூரிலும் எழுச்சி பயண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.