sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆலத்தூர் மகா காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

/

ஆலத்தூர் மகா காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

ஆலத்தூர் மகா காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

ஆலத்தூர் மகா காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : பிப் 13, 2025 11:24 PM

Google News

ADDED : பிப் 13, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; மொண்டிபாளையம் அருகே ஆலத்தூரில் பல நூற்றாண்டுகளாக கரிய காளியம்மன் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் கருங்கற்களால் செய்யப்பட்டு, 2012ல் கும்பாபிஷேகம் நடந்தது.

12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது.

இரவு முதற்கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடந்தது. 12ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வியும், விமான கலசங்கள் நிறுவுதலும், எண்வகை மருந்து சாத்துதலும் நடந்தது. மாலையில் மூன்றாம் கால வேள்வி நடந்தது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கன்னி மூலை கணபதி, அரசரடி விநாயகர் மற்றும் சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 9:00 மணிக்கு கரிய காளியம்மன், மகா காளீஸ்வரர் விமானங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

பஞ்சவாத்தியத்துடன், செண்டை மேளம், கைலாய வாத்தியம் மற்றும் ஜமாப் இசைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us