sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆழியாறு நீர்மட்டம் 118 அடியாக உயர்வு; விவசாய பயன்பாட்டுக்கு உபரிநீர் திறப்பு

/

ஆழியாறு நீர்மட்டம் 118 அடியாக உயர்வு; விவசாய பயன்பாட்டுக்கு உபரிநீர் திறப்பு

ஆழியாறு நீர்மட்டம் 118 அடியாக உயர்வு; விவசாய பயன்பாட்டுக்கு உபரிநீர் திறப்பு

ஆழியாறு நீர்மட்டம் 118 அடியாக உயர்வு; விவசாய பயன்பாட்டுக்கு உபரிநீர் திறப்பு


ADDED : ஜூலை 09, 2025 09:55 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ஆழியாறு அணை நீர்மட்டம், 118.30 அடியாக உயர்ந்ததால், விவசாய பயன்பாட்டுக்காக உபரிநீர் திறந்து விடப்பட்டது.

பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு அணை, 76 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பரப்பு கொண்டது. அணையில், 3,864 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். மொத்தம், 120 அடி உயரமுள்ள அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர், ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தேவைக்காக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

நடப்பாண்டு, பருவமழை கை கொடுத்ததால் அணை நீர்மட்டம் மெல்ல உயர்ந்தது.கடந்த, ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த, 21ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது.

கடந்த, 3ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, நீர்மட்டம் 115.20 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 118.30 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 787 கனஅடி நீர் வரத்து இருந்தது. ஆற்றில், 650 கனஅடியும், கால்வாயில் 76 கனஅடி என, மொத்தம், 731 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அணை முழு கொள்ளளவை எட்டும் சூழலில், உபரிநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில், விவசாய பயன்பாட்டுக்கு கால்வாய் மற்றும் ஆறு வாயிலாக திறக்கப்பட்டது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஆழியாறு அணையில், 120 அடியில், 118.30 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டுக்காக கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us