sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநாடு

/

 அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநாடு

 அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநாடு

 அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநாடு


ADDED : டிச 25, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: புனேவை தலைமையிடமாகக் கொண்ட, அகில இந்திய மத்திய அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு, வடகோவை குஜராத் சமாஜில் நடந்தது.

தற்போது பெற்றுவரும் மாதாந்திர மருத்துவப்படியை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், மருத்துவப்படி உயர்வு, ஊதியக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொருளாளர் சந்திரமோகன், ஆண்டறிக்கை, நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். செயல் தலைவர் சுதாகரன், அமைப்புச் செயலர் வெங்கடாசலம் உட்பட தபால் ஆர்.எம்.எஸ்., - பி.எஸ்.என்.எல்., இந்திய அச்சகத்துறை, அகில இந்திய வானொலி, ரயில்வே, பாஸ்போர்ட், இந்திய சர்வே மத்திய நீர் வாரியம் என பல துறைகளைச் சார்ந்த, 350க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

70, 75, 80, 85, 90 வயது நிறைவு பெற்ற 85 மூத்த ஓய்வூதியர்களுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தலைவராக சீனிவாசன், செயலாளராக பஞ்சநாதன், பொருளாளராக சந்திரமோகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர் மணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us