ADDED : அக் 07, 2024 12:52 AM

அ நிறம் | அளவு
கோவை : கோவை ராம்நகர் சபர்பன் பள்ளியில்,1994ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்தித்து, நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளியில் படிக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவ திட்டமிட்டுள்ளனர்.
தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் 15 பேருக்கு, நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தவிர, பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவ முன்வந்துள்ளனர்.
