sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்றரை மணி நேரம் கும்மி ஆட்டம் ஆடி அசத்திய பெண்கள்

/

மூன்றரை மணி நேரம் கும்மி ஆட்டம் ஆடி அசத்திய பெண்கள்

மூன்றரை மணி நேரம் கும்மி ஆட்டம் ஆடி அசத்திய பெண்கள்

மூன்றரை மணி நேரம் கும்மி ஆட்டம் ஆடி அசத்திய பெண்கள்


ADDED : நவ 11, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார், : அன்னுாரில் நடந்த அரங்கேற்றத்தில், 300 பேர், மூன்றரை மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் ஆடி, அசத்தினர்.

அன்னுார் வட்டாரத்தில், பல்வேறு கலைக்குழு சார்பில், சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு வள்ளி கும்மியாட்டம் கற்பிக்கப்படுகிறது. அன்னுார் ஏ.எம். காலனியில், வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், கடந்த 45 நாட்களாக, 300க்கும் மேற்பட்டோருக்கு, வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி ஆட்டம் கற்பிக்கப்பட்டது.

அரங்கேற்ற விழா, அன்னுார் கொங்கு செட்டியார் மகாலில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. முளைப்பாரி எடுக்கப்பட்டது. விநாயகர் வழிபாடு நடந்தது. நாட்டுப்புறப் பாடல் மற்றும் திருக்குறள் பாடலுக்கு, இசைக்கு ஏற்ப, கைகளை மேலும் கீழும் உயர்த்தி, நளினமாக சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், 300 பேர், மூன்றரை மணி நேரம் கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர். பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து, பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் மு.பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் சி.ஆர். பழனிச்சாமி மற்றும் இணை ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள், எய்ம் பவுண்டேசன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us