sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு

/

ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு

ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு

ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு


ADDED : ஜன 08, 2025 11:13 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் புதுப்பிப்பு பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலை நோக்குப்பார்வையில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதில், பயணியருக்கு உண்டான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.

மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டுவதாகும்.

இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு, மார்ச், 2024க்குள் பணிகள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டதாக தெரிகிறது.

அதில், பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ள கடந்தாண்டு ஏப்., மாதம் மின் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

அதில், வாகன நிறுத்தப்பகுதிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. முகப்பு பகுதி முழுவதுமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், முகப்பு பகுதியில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு அங்கு பூங்கா போன்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us