/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் சிந்தனையை துாண்டும் கல்விமுறை
/
மாணவர்களின் சிந்தனையை துாண்டும் கல்விமுறை
ADDED : பிப் 28, 2026 05:31 AM
வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1989 ம் ஆண்டில் இருந்து 36 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஜி.வி.கே., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி என 2025-26ம் கல்வி ஆண்டில் மாற்றம் பெற்றது.
பள்ளித் தாளாளர் சுனிதா, செயலர் சந்திரகாந்தி மற்றும் ஆசிரியர்களும் மாணவர் நலனை மனதில் நிறுத்தி இடைவிடாது பணியாற்றி வருகின்றனர். உளவியல் ரீதியாக மாணவர் மனநிலையையும், வயதையும் கருத்தில் கொண்டு மகிழ்வுடன் கற்கும் வகையில் குழந்தைகளின் சிந்தனைகளை ஊக்குவிக்கும் கல்விமுறையும் அமைக்கப்பட்டுள்ளது.
கலைகள், கைவேலைப்பாடுகள், ஓவியம், நாடகம், மேடைப் பேச்சு, கற்பனைத்திறன், படைப்பூக்கம்,செவ்வியல் மற்றும் மேற்கத்திய இசை, நடனம் எனப் பல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு, மனமகிழ் மன்றம், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் இயக்கம் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாணவர்களை ஆளுமை பெற்ற நல்ல மனிதர்களாக மாற்றும் சேவையை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கை நடக்கிறது.

