/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனவளக்கலை யோகா கற்றுக்கொள்ள அழைப்பு
/
மனவளக்கலை யோகா கற்றுக்கொள்ள அழைப்பு
ADDED : ஜூலை 07, 2025 11:40 PM
அன்னுார்; மனவளக்கலை யோகா வகுப்பு வரும் 10ம் தேதி துவங்குகிறது.
அன்னுார் அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த 'முழுமை நல வாழ்விற்கு, மனவளக்கலை யோகா' என்னும் 12 நாள் பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி துவங்குகிறது. 10ம் தேதி மாலை 4:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது.
தினமும் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, 12 வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் எளிய உடற்பயிற்சி, தவம், காயகல்பம், மூச்சுப் பயிற்சி ஆகியவை கற்பிக்கப்படும். இப்பயிற்சி பெறுவதால் உடல் நலம், மனநலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். '
மேலும் விவரங்களுக்கு 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

