sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடங்கள்

/

அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடங்கள்

அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடங்கள்

அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடங்கள்


ADDED : ஜூன் 29, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; 'அபாய நிலையில் அங்கன்வாடி கட்டிடங்கள் உள்ளன,' என இ. கம்யூ., ஒன்றிய மாநாட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்திய கம்யூ. 13 வது அன்னுார் ஒன்றிய மாநாடு வடக்கலூரில் நேற்று நடந்தது. மாநாட்டில், அபாய நிலையில் உள்ள நாகமாபுதூர், குமாரபாளையம், அங்கன்வாடி கட்டிடங்களை அகற்ற வேண்டும். அன்னுார் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நூற்பாலைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பும், அரசு நிர்ணயித்த சம்பளமும் வழங்க வேண்டும்.

தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க வேண்டும். சொந்த இடமும், வீடும் இல்லாத ஏழை, எளியோருக்கு, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய செயலாளராக செல்வராஜ், துணைச் செயலாளராக ஈஸ்வரன், பொருளாளராக கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாவட்ட பொருளாளர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us