/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை கபடி போட்டி; முதலிடம் வென்ற இந்துஸ்தான்
/
அண்ணா பல்கலை கபடி போட்டி; முதலிடம் வென்ற இந்துஸ்தான்
அண்ணா பல்கலை கபடி போட்டி; முதலிடம் வென்ற இந்துஸ்தான்
அண்ணா பல்கலை கபடி போட்டி; முதலிடம் வென்ற இந்துஸ்தான்
ADDED : செப் 15, 2025 09:53 PM

கோவை; அண்ணா பல்கலை, 10வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி போட்டி, கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இரு நாட்கள் நடந்தது. இதில், 22 கல்லுாரி அணிகள் களம் கண்டன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லுாரி அணியும், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 32-26 என்ற புள்ளிக்கணக்கில், தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் அரையிறுதியில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், ஜே.சி.டி., இன்ஜி., கல்லுாரி அணியும் மோதின. இதில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 38-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 52-30 என்ற புள்ளிக்கணக்கில், தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணய்யன் பரிசு வழங்கினார். முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.