ADDED : ஜூலை 06, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; வடக்கலுாரில், 13 ஏக்கர் பரப்பளவில், ஐ.சி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது.
இங்கு நவீன கிரிக்கெட் மைதானத்தை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நேற்றுமுன்தினம் அங்கு காலை 8:30 மணிக்கு வந்தார். காலை 9:00 மணிக்கு சரண் தலைமையிலான அணியில் அண்ணாமலை விளையாடினார்.
அந்த அணிக்கு எதிராக கவுதம் தலைமையில் ஒரு அணி விளையாடியது.
மாநில பயிற்சியாளர் கிருபா, உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்து விட்டு சென்றார்.