ADDED : மார் 16, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;
பொள்ளாச்சி திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் விஜயலட்சுமி, அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் முன்னேற்றம், பள்ளிகளுக்கான தேவைகள் குறித்து, பெற்றோர் விளக்கி பேசினர். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் போட்டிகளில் வென்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றன.