/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 04, 2024 11:34 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் 24ம் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அதிகாரி தினேஷ் ராம், பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ் மற்றும் முதல்வர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர் தினேஷ் ராம் பேசுகையில், ''மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த மதிப்பு வழங்க வேண்டும். இதனால், அவர்கள் தங்கள் தேசத்திற்கு திறம்பட சேவை செய்ய முடியும்,'' என்றார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ், பதக்கம் வழங்கினார். பள்ளி மாணவியான பாடகி ஸ்ரீநிதாவுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பள்ளி அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், மாணவி ஸ்ரீநிதாவிற்கு, கல்வியில் 100 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறி பாராட்டினார்.

