sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரிசி கடத்தல் வழக்கில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

/

அரிசி கடத்தல் வழக்கில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

அரிசி கடத்தல் வழக்கில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

அரிசி கடத்தல் வழக்கில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு


ADDED : ஆக 04, 2025 07:32 PM

Google News

ADDED : ஆக 04, 2025 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் தேடப்படடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில், பழநி, பழைய ஆயக்குடியை சேர்ந்த சின்னதம்பி,31, பாண்டியன்,24, நாகபட்டிணத்தை சேர்ந்த குருமூர்த்தி,49, கோவை கரும்புக்கடையை சேர்ந்த பைசல் ரகுமான்,24, கோவை முத்து காலனியை சேர்ந்த ரஹீம்,23, உக்கடம் ஜான்சா,33 ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்,4ல் நடக்கிறது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர்கள், குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றத்தில் நேரிலோ, வக்கீல் வாயிலாகாவோ, ஆஜராகும்படி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், சம்மன் வழங்க சம்பந்தப்பட்ட முகவரிகளுக்கு சென்ற போது அவர்கள் அங்கு வசிக்கவில்லை.

அவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us