sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கேள்விகளுக்கு உடனே கிடைத்தன பதில்கள்: 'தினமலர் - பட்டம்' வினாடி -- வினா போட்டியில் அபாரம்

/

 கேள்விகளுக்கு உடனே கிடைத்தன பதில்கள்: 'தினமலர் - பட்டம்' வினாடி -- வினா போட்டியில் அபாரம்

 கேள்விகளுக்கு உடனே கிடைத்தன பதில்கள்: 'தினமலர் - பட்டம்' வினாடி -- வினா போட்டியில் அபாரம்

 கேள்விகளுக்கு உடனே கிடைத்தன பதில்கள்: 'தினமலர் - பட்டம்' வினாடி -- வினா போட்டியில் அபாரம்


ADDED : நவ 25, 2025 06:03 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர் - பட்டம்' 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ராமசாமி நகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவிகள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம், கற்றல் சார்ந்து சிந்தனை திறன், பாடப்பகுதிகளில் உள்ளார்ந்த புரிதலை வளர்த்து, படிப்பின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்த, இது போன்ற வினாடி - வினா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ராமசாமிநகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 90 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர்.

'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சீனிவாசன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இவர்களுடன், 'இ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மகாஸ்வேதா மற்றும் அஜித பிரியா; 'பி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி லோகனா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி லாவண்யா; 'எச்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தமிழ்செல்வி மற்றும் அபினயா; 'டி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஜாஸ்மின் ஸ்வீட்டி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு, தலைமையாசிரியர் முத்துராஜா மணி பரிசுகள் வழங்கினார்.

கோணவாய்க்கால் பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில் 60 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர்.

'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் ரக் ஷனா ஸ்ரீ மற்றும் சஸ்திகா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது .

இவர்களுடன், 'சி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் பத்மவாசுகி மற்றும் ஷபா பாத்திமா; 'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் தீக் ஷீத் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் முகேஷ்; 'பி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் தவுபீம் சித்தீகா மற்றும் ரீனா ஷெரின்; 'எப்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி உமைராபாத்திமா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவன் புனித்சரண் ஆகியோர், அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை உமாதேவி பரிசுகள் வழங்கினார்.

மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியருக்காக தொடர்ச்சியாக இப்போட்டி நடத்தப்பட உள்ளது. 'தேசிய மற்றும் சர்வதேச நாட்டு நடப்புகள், நவீன தொழில்நுட்பம் போன்ற அரிய செய்திகளை, இந்த போட்டியின் வழியே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us