sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு 40 போலீசாருடன் துவக்கம்

/

தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு 40 போலீசாருடன் துவக்கம்

தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு 40 போலீசாருடன் துவக்கம்

தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு 40 போலீசாருடன் துவக்கம்


ADDED : ஜன 27, 2024 11:24 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு, 40 போலீசாருடன் இயங்க துவங்கியது. விரைவில் தனி அலுவலகம், கூடுதல் போலீசார், தாக்குதல் குழு உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் மக்களை பாதுகாக்க இப்பிரிவு களமிறங்கவுள்ளது.

கோவையில் புதிதாக சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எஸ்.பி.,யாக சசிமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது தலைமையில், ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர் உள்பட, 40 போலீசார் பணிபுரிய உள்ளனர்.

இப்பிரிவுக்கான அலுவலகம், கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இயங்கி வருகிறது. தனி கட்டடம் கட்ட, 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:

கோவையை தலைமையிடமாக கொண்டு திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் என மேற்கு மண்டலத்தில் உள்ள, 8 மாவட்டங்களில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா), ஆயுத தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்படும். இப்புதிய பிரிவு விரையில், 90 போலீசாருடன் இயங்க துவங்கும்.

அனைத்து வகையான ஆயுதங்களை கையாள தெரிந்த தாக்குதல் குழு, உளவு தகவல்களை சேகரிக்கும் குழு உள்ளிட்ட, குழுக்கள் இடம்பெறும்.

உளவு பிரிவினர், பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்பு ஆதரவாளர்களின் விபரங்களை கொண்ட தரவு தளத்தை உருவாக்குவார்கள். பிற மாநிலத்தில் உள்ள உளவு பிரிவினருடன், இந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us