/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்
/
எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்
எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்
எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்
ADDED : அக் 19, 2024 11:30 PM

கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இரவு 1:00 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப, இரவு சிறப்பு பஸ் சேவையும் வேண்டும் என்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரிலுள்ள ஜவுளிகடைகள், நகைக்கடைகள், மொத்த வியாபார பல சரக்கு கடைகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்களில், பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெரிசலை பயன்படுத்தி, மர்ம ஆசாமிகள், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் உஷாராக இருக்க, ஒலி பெருக்கி வாயிலாக போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். சாதாரண உடையிலும், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வழக்கமான நாட்களில் இரவு 11:00 மணி வரை, கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை அடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்கள் அன்றாட அலுவலக பணி முடிந்த பிறகு, இரவு நேரத்தில், கடைக்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், அவசரத்தில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. வியாபாரிகளும் இரவு 11:00 மணிக்குள் கடைகளை அடைக்க முடிவதில்லை.
எனவே தீபாவளியை முன்னிட்டு, வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக கடைகளில் வியாபாரம் செய்யும் நேரத்தை, காவல்துறை அதிகரிக்க வேண்டும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.