sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்

/

எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்

எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்

எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்

1


ADDED : அக் 19, 2024 11:30 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:30 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இரவு 1:00 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப, இரவு சிறப்பு பஸ் சேவையும் வேண்டும் என்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரிலுள்ள ஜவுளிகடைகள், நகைக்கடைகள், மொத்த வியாபார பல சரக்கு கடைகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்களில், பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெரிசலை பயன்படுத்தி, மர்ம ஆசாமிகள், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் உஷாராக இருக்க, ஒலி பெருக்கி வாயிலாக போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். சாதாரண உடையிலும், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வழக்கமான நாட்களில் இரவு 11:00 மணி வரை, கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை அடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்கள் அன்றாட அலுவலக பணி முடிந்த பிறகு, இரவு நேரத்தில், கடைக்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், அவசரத்தில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. வியாபாரிகளும் இரவு 11:00 மணிக்குள் கடைகளை அடைக்க முடிவதில்லை.

எனவே தீபாவளியை முன்னிட்டு, வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக கடைகளில் வியாபாரம் செய்யும் நேரத்தை, காவல்துறை அதிகரிக்க வேண்டும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்பு பஸ் இயக்க வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு , மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணேசன் கூறியதாவது: வியாபார நிறுவனங்கள், 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், போலீசார் அனுமதிப்பது இல்லை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, வியாபார நிறுவனங்கள் இரவு ஒரு மணி வரை செயல்பட, மாநகர போலீஸ் கமிஷனர் அனுமதி அளிக்க வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு, வீடு திரும்புதற்கு வசதியாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, கணேசன் கூறினார்.








      Dinamalar
      Follow us