sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுகாதாரத்துறையில் பணியிடங்கள்: 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்

/

சுகாதாரத்துறையில் பணியிடங்கள்: 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்

சுகாதாரத்துறையில் பணியிடங்கள்: 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்

சுகாதாரத்துறையில் பணியிடங்கள்: 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்


ADDED : மார் 05, 2024 01:01 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாவட்டத்தில், மாவட்ட சித்த மருத்துவமனை, மக்களைத்தேடி மருத்துவம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆயுஷ் மருத்துவர் (சித்தா), மருந்து வழங்குனர் (சித்தா), ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி), மருந்து வழங்குனர் (யுனானி), பல்நோக்கு பணியாளர், சிகிச்சை உதவியாளர் (பெண்), திட்ட மேலாளர், தரவு உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், இடைநிலை சுகாதார பணியாளர், இயன்முறை மருத்துவ நிபுணர், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், செவிலியர், பல் மருத்துவ அலுவலர், பல் மருத்துவ உதவியாளர் என, 55 பணியிடங்கள் முற்றிலும், தற்காலிகமாக ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில், மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கான விண்ணப்பம், கூடுதல் விபரங்களை, https://coimbatore.nic.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அனைத்து சுயஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 20ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், ரேஸ்கோர்ஸில் உள்ள பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us