/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடியுங்க
/
குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடியுங்க
ADDED : ஆக 03, 2025 08:54 PM
வால்பாறை; வால்பாறை நகரில் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுவதால், நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக தென்மேற்குப்பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. பகல் நேரத்தில் பனிமூட்டமும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால் மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் குடியிருப்பு பகுதியில் காலை, மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் பருவமழை பெய்து வரும் நிலையில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது. சீதோஷ்ண நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில், நகராட்சி சார்பில் வால்பாறை நகரில் கொசு மருந்து அடிக்க வேண்டும். வழுக்கல் நிறைந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்' என்றனர்.

