sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம்

/

உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம்

உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம்

உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம்


ADDED : ஆக 04, 2025 08:09 PM

Google News

ADDED : ஆக 04, 2025 08:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில், உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஜே.இ.இ., க்யூட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக, வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படுகின்றன.

இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

பயிற்சி வழங்க இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில், முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படவுள்ளனர்.






      Dinamalar
      Follow us