sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை நியமனம்

/

புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை நியமனம்

புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை நியமனம்

புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை நியமனம்


ADDED : ஜூன் 16, 2025 08:21 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 08:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தையாக லாரன்ஸ் அடிகளார் நியமிக்கப்பட்டார்.

கிறிஸ்துவ கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில் பணியாற்றும் பங்கு தந்தையர்களின் பணியிட மாற்றம், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி, பொள்ளாச்சி வட்டார முதன்மை குருவாக பொறுப்பு வகித்த பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலய பங்குதந்தை ஜேக்கப் அடிகளார், பொள்ளாச்சியில் இருந்து மாற்றப்பட்டு கோவை மறை மாவட்டம் சூலுார் புனித சகாய அன்னை ஆலயத்தில் புதிய பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார்.

பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலயத்துக்கு புதிய பங்குதந்தையாக கோவை மயிலேறிபாளையம் நல்லாயன் குருத்துவ கல்லுாரி பேராசிரியர் அருட்தந்தை லாரன்ஸ் அடிகளார் நியமிக்கப்பட்டார். முன்னாள் பங்கு தந்தையை வழியனுப்பும் நிகழ்வும், புதிய பங்கு தந்தை வரவேற்பு நிகழ்வும் நடந்தது.

அதில், பொள்ளாச்சி வட்டார முதன்மை குருவாக பொறுப்பேற்ற, வால்பாறை துாய இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி அடிகளார் மற்றும் புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை லாரன்ஸ் அடிகளார் பணி சிறக்க, கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us