/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறனாய்வு தேர்வு 3 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
/
திறனாய்வு தேர்வு 3 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 21, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறையில் நடந்த திறனாய்வுத்தேர்வில், 3 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.
வால்பாறை தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், மாணவர்கள் மத்தியில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திறனாய்வு தேர்வில் மொத்தம், 116 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
தேர்வுக்கான ஏற்பாடுகளை, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

