ADDED : டிச 29, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்: -: கோவில்பாளையம் அருகே வரதையங்கார் பாளையம், லட்சுமி கார்டனை சேர்ந்தவர் பிரதீப், 22. இவர் மீது 11 வழக்குகள் உள்ளன.
இவர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று, கோவை கலெக்டர் பவன் குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். உத்தரவை, சேலம் சிறையில் உள்ள பிரதிப்பிடம், போலீசார் நேற்று வழங்கினர்.

