ADDED : ஏப் 22, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
கோவை: கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் முத்துவேல், 60; இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 15 ஆண்டுகளாக குடும்பத்தினரை பிரிந்து வாழ்கிறார்.
கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். கோவையில் சுற்றித்திரிந்த அவர் கடந்த 18ம் தேதி மாலை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு சிக்னல் அருகே தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் 20ம் தேதி உயிரிழந்தார். காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
