/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு
/
கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 07, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், மாணவ, மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது.
இதில், ஒப்புவித்தல், பாட்டு, ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி - வினா உள்ளிட்ட பல போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.