sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

/

பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


ADDED : ஜன 13, 2025 05:58 AM

Google News

ADDED : ஜன 13, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்தாண்டு, மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, கடந்த 4ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின், 9 நாட்களும், காலையும், மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதியுலா நடந்தது.

ஒன்பதாம் நாளான நேற்று இரவு, கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டு, சோமாஸ்கந்தர் திருவீதியுலா நடந்தது.

இன்று அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு, அபிஷேகம் செய்யப்படும். காலை, 8:00 மணிக்கு, ஆருத்ரா தரிசன காட்சியும், அதனைத்தொடர்ந்து, சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us