sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெயில் காலம் துவங்குவதால் பட்டுக்கூடு விலை உயரும் 

/

வெயில் காலம் துவங்குவதால் பட்டுக்கூடு விலை உயரும் 

வெயில் காலம் துவங்குவதால் பட்டுக்கூடு விலை உயரும் 

வெயில் காலம் துவங்குவதால் பட்டுக்கூடு விலை உயரும் 


ADDED : பிப் 01, 2024 12:04 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : வெயில்காலம் துவங்குவதால், பட்டுக்கூடு விலை அதிகரிக்கும் என, பட்டுக்கூடு விவசாயிகள் தெரிவித்தனர்.

கோவை, பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, பனிப்பொழிவு அதிகமானதால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்தது. ஒரு கிலோ 510 ரூபாய் வரை விற்பனையானது.

கடந்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு, விலை குறைந்தது. நேற்று முன் தினம், ஒரு கிலோ முதல் ரக பட்டுக்கூடு 476 ரூபாய்க்கும், அடுத்த ரகம் 420 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதுகுறித்து, பட்டு விவசாயி ஒருவர் கூறுகையில், 'வெயில் காலம் துவங்குவதால், பட்டுக்கூடு உற்பத்தி குறையும். ஆனால் நுால் தேவை அதிகரிக்கும். அதனால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us