/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 04, 2025 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; காட்டூர் காளப்பன் லே அவுட்டில் அமைந்துள்ள, ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
காலை 7:00 மணிக்கு, மங்கள இசை முழங்க சோமகும்ப பூஜை, சூரியபூஜைகளை தொடர்ந்து, பூர்ணாஹூதி நிறைவடைந்து யாகசாலையிலிருந்து கும்பங்கள் கோபுரகலசங்களுக்கு எழுந்தருளப்பட்டன.
அங்கு வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்களை கோபுரகலசத்தின் மீதும், சுவாமிகளின் மீதும் ஊற்றி, அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.