ADDED : மார் 05, 2026 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார் சத்தி சாலையில், சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி கருவூல அலுவலராக, ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கஜேந்திரன், சென்னை கருவூல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்டம், உடுமலை சார்நிலைக் கருவூலத்தில் பணிபுரிந்து வந்த மனோகரன், அன்னுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அலுவலருக்கு, ஓய்வூதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

