ADDED : மார் 05, 2026 04:56 AM
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், நுாற்றாண்டு நிறைவு விழா நடத்தப்பட்டது.
அக்வாசப் இன்ஜினியரிங் டெக்ஸ்மோ ராமசாமி நினைவாக புதிய வகுப்பு கட்டடம், மகாராஜா குரூப்ஸ் பாபு, ஹேமலதா குடும்பத்தினர் சார்பாக நுழைவு வாயில் கட்டடம், சூர்யா இண்டஸ்ட்ரீஸ் யோகானந்தம், கலைமணி ஆகியோர் வழங்கிய விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய விளையாட்டு திடல் ஆகியவற்றுக்கான திறப்பு விழா நடத்தப்பட்டது.
கவுன்சிலர் சித்ரா தங்கவேலு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கோமதி வரவேற்றார். விழா கமிட்டியினர் மவுனசாமி, சுந்தரம், கந்தசாமி, சக்கரையப்பன், தேவேந்திரன், ஆடிட்டர் கதிர்வேலு, முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, எம்.எல்.ஏ., அருண்குமார், அக்வாசப் இன்ஜினியரிங் துணைத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜயலட்சுமி நன்றி கூறினார்.

