ADDED : மார் 02, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுாரில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிர்வாகிகள் கூறுகையில், 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 1,400 குளம், குட்டைகள், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விடுபட்டுள்ளன. அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தை துவக்க கோரி பலமுறை வலியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். பணியை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு அன்னுார் பயணியர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றனர்.
