ADDED : பிப் 18, 2025 10:12 PM
அன்னுார்; அன்னுாரில், தேங்காய் உள்ளிட்ட விளை பொருள் ஏல விற்பனையில் பங்கேற்க, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று (19ம் தேதி) காலை 9:00 மணிக்கு ஏல விற்பனை நடைபெறுகிறது.
இதில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களான, தேங்காய், தேங்காய் கொப்பரை, வாழைக்காய் உள்ளிட்டவற்றை ஏல விற்பனைக்கு கொண்டு வரலாம்.
ஏல விற்பனையில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்-கேற்க உள்ளனர். விளை பொருட்களை விற்ற உடனே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். எந்த கமிஷனும் தரத் தேவையில்லை.
பொருட்களை விற்பனை செய்ய முடியாவிட்டால் இங்கு உள்ள கிடங்கில் இருப்பு வைத்து குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.
நல்ல விலை வரும்போது விற்பனை செய்யலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.