நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: புலியகுளம் தாமு நகரை சேர்ந்தவர் பிரபு.41; ஆட்டோ டிரைவர். இவருக்கு சொந்தமான ஆட்டோவை, கோவை அரசு மருத்துவமனை அருகே, அரசு கலை கல்லுாரி ரோட்டில் நேற்று முன்தினம் பகலில் நிறுத்தினார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் குழந்தையை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது, ஆட்டோவை காணவில்லை. அதன் மதிப்பு 2.90 லட்சம் ரூபாய். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

