தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனம் குறித்து விழிப்புணர்வு

வனம் குறித்து விழிப்புணர்வு

வனம் குறித்து விழிப்புணர்வு


ADDED : நவ 03, 2025 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சில வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வந்து செல்கின்றன. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தடுக்கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் உத்தரவின் படி, தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கோத்தகிரி சாலையில் உள்ள மரக்கிடங்கில் வனம் மற்றும் வன விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வனவர் சிங்காரவேலு தலைமையிலான வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us