sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்

/

ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்

ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்

ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்


ADDED : ஆக 03, 2025 09:23 PM

Google News

ADDED : ஆக 03, 2025 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் பாதுகாப்புடன் இருப்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சமீப காலமாக ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளை குறிவைத்து, திருட்டு சம்பவங்கள், பாலியல் தொந்தரவுகள் நடந்து வருகின்றன.

இதற்கு முடிவு கட்ட ரயில்வே போலீசார் சார்பில், பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கோவை ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் மேட்டுப்பாளையம் எஸ்.ஐ., மனோகரன், சாந்தி, மங்கையர்க்கரசி, வனக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் பமீலா உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், ஓடும் ரயிலில் தின்பண்டங்களை புதிய நபர்கள் யாராவது கொடுத்தால், அதை உண்ணக்கூடாது. உடைமைகளை எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் பெட்டியில் ஆண்கள் அத்துமீறி நுழைந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உடன் பயணம் செய்யும் பயணிகளிடம் தேவையில்லாத தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்தான கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us