sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு பல குரலில் பேசி விழிப்புணர்வு பிரசாரம்

/

கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு பல குரலில் பேசி விழிப்புணர்வு பிரசாரம்

கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு பல குரலில் பேசி விழிப்புணர்வு பிரசாரம்

கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு பல குரலில் பேசி விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : டிச 31, 2024 07:49 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம் : 'கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு,' என கலைக்குழுவினர் பிரசாரம் செய்தனர்.

மதுவிலக்கு துறை மற்றும் வருவாய் துறை இணைந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றன.

இதில் நேற்று கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கதிரவன் கலை குழு சார்பில் தியாகராஜன் உள்ளிட்டோர் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மது அரக்கனைப் போல் வேடம் அணிந்த ஒருவர் பல குரலில் பேசி அசத்தினார். இதில் மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் பேசுகையில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடல்நலம் மன நலம் பாதிக்கப்படும். வருமானம் குறையும். ஒரு முறை தான் என போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கினால் பின்னர் அவை தொடர்ந்து விடும். நம் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் ஆகியோரை மனதில் நினைத்து போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும், என்றார்.

எஸ்.ஐ., ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் அறிவுடை நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கணேசபுரம், கரியாம்பாளையம், அன்னூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வடவள்ளியிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us