/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி
ADDED : அக் 23, 2024 12:15 AM

வால்பாறை : வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. தாசில்தார் (பொ) மோகன்பாபு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் வரவேற்றார்.
மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தன. ஓட்டுச்சாவடி நிலைய மேற்பார்வையாளர் இளங்கோ போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும், வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் இளம் வயதிலேயே தெரிந்து கொாள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் வாக்குரிமையை விற்பனை செய்யக்கூடாது. சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளது, என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

