ADDED : பிப் 20, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரமடை: மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் மாணவ, மாணவியருக்கு, வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள், அதன் வாயிலாக பெறப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக, பெடரல் வங்கி அகாடமி சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலகளவில் உள்ள வேலைவாய்ப்பு சந்தையில், இளைஞர்களின் திறனை மேம்படுத்துவது, உரிய பணிகளை தேர்ந்தெடுப்பது, அதற்காக எந்த திறன் பயிற்சி படிப்பை படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பெடரல் அகாடமி மையத் தலைவர் ரேகா, திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், கல்லுாரி முதல்வர் மாரிமுத்து, வணிகவியல் துணைத்தலைவர் சிவஞானசித்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

