/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்
/
வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்
வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்
வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : அக் 12, 2025 10:37 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், வனப்பகுதி ஒட்டிய கிராமங்கள் மற்றும் செட்டில்மென்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
வரும் 20ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மென்ட் பகுதிகளில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
வனப்பகுதி அருகே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடிச் சென்று விடும் அபாயம் உள்ளது.
எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை, பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள், முன்வர வேண்டும்.
வனப்பகுதியில் செட்டில்மென்ட் வசிக்கும் பழங்குடியின மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மென்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதேபோல, வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டுப்பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.