sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மஞ்சள் பை உபயோகிக்க கிராம சபையில் விழிப்புணர்வு

/

மஞ்சள் பை உபயோகிக்க கிராம சபையில் விழிப்புணர்வு

மஞ்சள் பை உபயோகிக்க கிராம சபையில் விழிப்புணர்வு

மஞ்சள் பை உபயோகிக்க கிராம சபையில் விழிப்புணர்வு


ADDED : ஜன 27, 2025 12:38 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; பிளாஸ்டிக் கவர்கள் வேண்டாம், மஞ்சள் பை தான் உபயோகப்படுத்த வேண்டும் என சிக்காரம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று சிக்காரம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், செயலாளர் நேசராணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மக்களுக்கு தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் கவர்கள் வேண்டாம், மஞ்சள் பை தான் உபயோகப்படுத்த வேண்டும் என மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மத்திய அரசின் விவசாய நிதி உதவி திட்டம் தொடர்பாக விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெள்ளாதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தெரு விளக்குகள் பற்றாக்குறையால் திருடர்கள் நடமாட்டம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், மக்களின் கோரிக்கைகளான சாக்கடை வடிகால், குக்கிராமங்களில் உள்ள அனைவருக்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-----






      Dinamalar
      Follow us