ADDED : ஏப் 02, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடந்தது. மனித சங்கிலியாக நின்று, நூறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. கற்பகம் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர், மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
