sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி, கல்லுாரி முன் விழிப்புணர்வு வாசகம்

/

பள்ளி, கல்லுாரி முன் விழிப்புணர்வு வாசகம்

பள்ளி, கல்லுாரி முன் விழிப்புணர்வு வாசகம்

பள்ளி, கல்லுாரி முன் விழிப்புணர்வு வாசகம்


ADDED : செப் 14, 2025 11:07 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் முன்பாக, புகையிலை பயன்படுத்த தடை என வாசகம் எழுதப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் முன்பாக 'புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் ரோட்டில் வண்ணம் தீட்ட அரசு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி முன்பாக, ரோட்டில் விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து, நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் கூறுகையில், ''மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தல் படி, பள்ளி மற்றும் கல்லூரி முன்பாக, 'புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி', என வாசகம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி புகையிலை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், இந்த வாசகம் எழுதப்பட்ட இடத்தில் இருந்து 300 அடி தொலைவுக்குள் கடைகளில் புகையிலை பொருட்கள் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us