sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விழிப்புணர்வு

/

கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விழிப்புணர்வு

கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விழிப்புணர்வு

கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விழிப்புணர்வு


ADDED : மார் 20, 2025 11:38 PM

Google News

ADDED : மார் 20, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாய குழுவும் இணைந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இம்மையத்தில் நேற்று சிட்டுக்குருவிகளை காப்பது வாயிலாக, இயற்கையை வளமாக்க சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், 'இயற்கையும், உயிரினங்களும்' என்ற தலைப்பில் பயிற்சியாளர்கள் இடையே விவாத மேடை அமைக்கப்பட்டு, கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 'இயற்கையின் பாதுகாப்பில், நமது பங்கு' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது. தொடர்ந்து, சிட்டுக்குருவிகள் மற்றும் அனைத்து வகையான பறவை இனங்களுக்கு தற்போது நிலவும் கோடை வெயில் காலத்தில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அனைத்து உயிர்களையும் வளர்த்தல், அவர்களிடையே கருணை காட்டுதல், பாதுகாத்தல் ஆகியவை குறித்து பயிற்சியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இம்மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.






      Dinamalar
      Follow us