sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இழப்பீடு வழங்க பஜாஜ் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

/

இழப்பீடு வழங்க பஜாஜ் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

இழப்பீடு வழங்க பஜாஜ் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

இழப்பீடு வழங்க பஜாஜ் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு


ADDED : அக் 02, 2024 07:42 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, கணபதிமாநகரை சேர்ந்த கண்ணன், ரேஸ்கோர்சிலுள்ள 'பஜாஜ் பின்சர்வ் ' என்ற நிதி நிறுவனத்தில், 2015 நவம்பரில், 2.32 லட்சம் ரூபாய் தனி நபர் கடன் பெற்றார்.

மாதந்தோறும், 6,409 ரூபாய் விகிதம், 48 மாதத்தில், ரூ.3.07 லட்சம் திருப்பி செலுத்த வேண்டும். முழு கடன் தொகையை, தவணை முடிவதற்கு முன்பே கண்ணன் செலுத்தி விட்டார். ஆனால், கடன் பாக்கி இருப்பதாக கூறி, அவரை ஏமாற்றி கூடுதலாக 67,845 ரூபாய் வசூலித்தனர்.

பாதிக்கப்பட்ட கண்ணன், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'எதிர்வாதியின் முறையற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாட்டிற்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையினை, 12 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு திரும்ப கொடுப்பதோடு, வழக்கு செலவு, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us