sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மயோனெய்ஸ்' விற்பனைக்கு தடை உணவு பாதுகாப்புத்துறையின் உறக்கம் கலைகிறது

/

'மயோனெய்ஸ்' விற்பனைக்கு தடை உணவு பாதுகாப்புத்துறையின் உறக்கம் கலைகிறது

'மயோனெய்ஸ்' விற்பனைக்கு தடை உணவு பாதுகாப்புத்துறையின் உறக்கம் கலைகிறது

'மயோனெய்ஸ்' விற்பனைக்கு தடை உணவு பாதுகாப்புத்துறையின் உறக்கம் கலைகிறது


ADDED : ஏப் 26, 2025 11:14 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக அரசு, சமைக்கப்படாத முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனெய்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. கோவையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், இதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன.

சமைக்கப்படாத முட்டையில் உள்ள பாக்டீரியாக்கள் உடலில், தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதால், இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உணவு பாதுகாப்புத்துறை சார்பில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, விழிப்புணர்வு பணிகளை அனைத்து கடைகள், பேக்கரிகளில் ஏற்படுத்தவுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், '' மயோனெய்ஸ் தயாரிப்பில், சால்மொனெல்லா போன்ற பாக்டீரியா, கிருமி தொற்று ஏற்பட்டு, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வேக வைக்காத முட்டையில் இருந்து மயோனெய்ஸ் தயாரிப்பதோ, விற்பனை செய்யவோ கூடாது.

இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கள ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். முட்டை இல்லாமல் தயாரிக்கும் மயோனெய்ஸ் விற்பனை செய்ய தடையில்லை,'' என்றார்.

இப்போதுதான் தெரிந்ததா?

பாதுகாப்பான உணவு பொருட்கள் பொதுமக்களை சென்றடைய வேண்டியதை, கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டியதுதான், உணவு பாதுகாப்புத்துறையின் பொறுப்பு. இப்படியிருக்க, மயோனெய்ஸ் ஆபத்தானது என்பது தெரிந்தும், இதுவரை ஆய்வு செய்து, தடை செய்யாதது ஏன் என்பதற்கு, கோவை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என்ன பதில் வைத்

திருக்கிறார்?








      Dinamalar
      Follow us