sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை

/

கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை

கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை

கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை


ADDED : பிப் 16, 2024 12:53 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவியில் நீர்வரத்து குறைந்து உள்ளதால், இன்று முதல் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே, ஆழியாறு, வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவியில், சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்தாண்டு வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகள், மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது, மழைப்பொழிவு இல்லாத சூழலில், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது; சுற்றுலா பயணியர் குளிக்கும் அளவுக்கு நீர் வரத்து இல்லை என்பதால் வனத்துறை தடைவிதித்துள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'கவியிருவியில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா பயணியருக்கு 16ம் தேதி (இன்று) முதல் தடை விதிக்கப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us