/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
27ம் தேதி வாழை சாகுபடி கருத்தரங்கு
/
27ம் தேதி வாழை சாகுபடி கருத்தரங்கு
ADDED : ஜன 22, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி,; சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் சூலூர் சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் இணைந்து வாழை சாகுபடி கருத்தரங்கை நடத்த உள்ளன.
காடுவெட்டி பாளையத்தில், விவசாயி துரைசாமி தோட்டத்தில், வரும், 27ம் தேதி கருத்தரங்கு நடக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்த ராஜா, பழப்பயிர்கள் துறை தலைவர் அக்சில்யா, பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் செந்தில்வேல் ஆகியோர், வாழை சாகுபடி குறித்து பயிற்சி அளித்து பேசுகின்றனர்.
வாழையில் குருத்து அழுகல், காய் வெடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீர்வை பெற, இக்கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.