/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்
/
வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : ஆக 21, 2025 08:17 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கேரள வியாபாரிகள் வருகை அதிகம் உள்ளதால், வாழைத்தார் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.
கேரளாவில் ஓணம் சீசன் துவங்கியுள்ள நிலையில், வாழைத்தார்களுக்கு அதிக விலை கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் -- 30, ரஸ்தாலி --- 40, பூவன் --- 38, கதளி --- 35, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, தற்போது நேந்திரன் கிலோ -- 10, ரஸ்தாளி --- 2 மற்றும் கதளி --- 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. பூவன் வாழைத்தார் மட்டும் கணிசமாக விலை அதிகரித்துள்ளது.
வாழைத்தார் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த விவசாயிகள், விலை சரிவால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'வாழைத்தார் வரத்து அதிகரிக்கவில்லை. ஆனால், விற்பனையாகாமல் தேக்கமடைந்ததால், விலை சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் விலை உயர வாய்ப்புள்ளது,' என்றனர்.