/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி
/
வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : ஏப் 09, 2025 10:15 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேந்திரன், பூவன், கதளி உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்படும் வாழைத்தார், தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (9ம் தேதி) நேந்திரன் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய், கதளி --- 35, ரஸ்தாளி --- 40, பூவன் --- 38, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, தற்போது நேந்திரன் கிலோ 5 முதல் 10 ரூபாய் மற்றும் பூவன் வகை 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மற்ற வாழைத்தார்களின் விலையில் மாற்றம் இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'மழை காரணத்தினால் வாழைத்தார்கள் வரத்து குறைவாக இருந்தது. செவ்வாழை வரத்து இல்லை. இதனால், வாழைத்தார் விலை கணிசமாக உயர்ந்துள்ளது,' என்றனர்.